×

இறந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்டால் முஷாரப் உடலை இழுத்து வந்து 3 நாள் தொங்க விட வேண்டும்: மரண தண்டனை குறித்து தீர்ப்பில் விளக்கம்

இஸ்லாமபாத்: ‘‘தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஷாரப்பை, சட்ட அமலாக்கத்துறையினர் எப்படியாவது கைது செய்து மரண தண்டனை உறுதி செய்ய வேண்டும். அவர் இறந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்டால், உடலை இஸ்லமாபாத் இழுத்து வந்து 3 நாள் தொங்க விட வேண்டும்’’ என பெஷாவர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.  பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு, தேசத் துரோக வழக்கில் மரண தண்டனை விதித்து பெஷாவர் உயர் நீதிமன்றம் கடந்த 17ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. தலைமை நீதிபதி வாகர் அகமது சேத் தலைமையில் நீதிபதிகள் நாசர் அக்பர், கரீம் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த 167 பக்க தீர்ப்பில், முன்னாள் அதிபர் முஷராப்புக்கு எப்படி தண்டனை அளிக்க வேண்டும் என்பதையும் நீதிபதிகள் விவரித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:

தேசத் துரோக வழக்கு குற்றவாளி முஷாரப் எங்கிருந்தாலும், அவரை சட்ட அமலாக்கத்துறையினர் கைது செய்து அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.  சாகும் வரை அவர் தூக்கலிடப்பட வேண்டும். ஒருவேளை இறந்த நிலையில் முஷாரப் கண்டுபிடிக்கப்பட்டால் அவரது உடலை இஸ்லாமபாத்தின் டி-சவுக் பகுதிக்கு இழுந்து வந்து, 3 நாள் தொடங்க விட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.  தீர்ப்பளித்த 3 நீதிபதிகளில் கரீம் மட்டும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார். முசாரப் உடலை இழுத்து வந்து 3 நாள் தொங்கவிட வேண்டும் என்ற கருத்தில் அவருக்கு உடன்பாடு இல்லை. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘இதுபோன்று கொடூரமான முறையில் தீர்ப்பளிக்க சட்டத்தில் அதிகாரம் இல்லை. குற்றவாளிக்கு மரண தண்டனையே போதுமானது’’ என குறிப்பிட்டுள்ளார்.



Tags : Musharraf , Musharraf, body and death sentence
× RELATED தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான்...